மூன்று அரச நிறுவனங்கள் அரசாங்கத்தின் கூட்டு நிதிக்கு நன்கொடை

இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஆகியன கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் கூட்டு நிதிக்கு 2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளன.

இது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

இதன்படி, இலங்கை துறைமுக அதிகாரசபை 1 பில்லியன் ரூபாவையும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் ரூபா 500 மில்லியனையும், சிவில் விமான சேவைகள் அதிகார சபை 500 மில்லியனையும் அரசாங்கத்தின் கூட்டு நிதிக்கு வழங்கியுள்ளன.

கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திர, இலங்கை அதிகார சபையின் தலைவர் கீத் டி. பெர்னாட், விமான நிலையத்தின் தலைவர் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) (தனியார்) லிமிடெட் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.