தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கக் கூடாது -கம்மன்பில

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பரந்த எதிர்க் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு பரந்த கூட்டணியொன்று உருவாக்கப்பட வேண்டும்.

நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி உள்ளுராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் துயரங்களைப் போக்க, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நபர்களைக் கொண்ட பரந்த கூட்டணியை எதிர்க்கட்சி உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.