மியன்மார் அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு இடமாற்றம்..
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 மியன்மார் அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மாலை வேளையில் மீரிகான தடுப்பு முகாமை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை