போதைப்பொருள் பாவிப்போரை பரிசோதிக்க அதிநவீன உபகரணம்!

போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாகநடைமுறைபடுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளாந்தம் வாகன விபத்துக்களில் சுமார் 8 பேர் உயிரிழப்பதாகவும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 4 அல்லது 5 பேர் உயிரிழப்பதாகவும் காவல்துறை போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சோதனைகள் தொடங்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.