அக்கரைப்பற்று பொலிஸாரால் 15 கிராம் கேரளா கஞ்சா மற்றும் ஒரு இலச்சத்து 72 ஆயிரம் ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் கைது!!
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 55 வயதுடைய பிரபல வியாபாரியை 15 கிராம் கேரளாகஞ்சா மற்றும் ஒரு இலச்சத்து 72 ஆயிரம் ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்டசகர் செனவரெத்தினவின் ஆலோசனைக்கமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ,எம்.எம். பண்டார விஜயதுங்காவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர்வசந்த தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த வீட்டை முற்றுகையிடனர்.
கருத்துக்களேதுமில்லை