மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு-கஞ்சன விஜேசேகர…

ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனவரி மாதம் குறித்த சட்டமூலத்தில் புதிய கட்டணம் சேர்க்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் அது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.