வாதுவையில்-பிரேத ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஆட்டோ மோதியதில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

விபத்தொன்றில் சிக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் வாதுவையில் உள்ள மயானம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சடலத்தின் பின்னால் சென்றவர்களை வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாணந்துறை மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.