யாழ். நவக்கிரியில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி

யாழ்ப்பாணம் நவக்கிரிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.


இந்த விசித்திர ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதற்கென விவசாயியின் வீட்டுக்கு அதிகளவான மக்கள் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், புத்தூர் நவக்கிரி மேற்குப் பகுதியிலேயே இவ் விசித்திரமான ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.

நவக்கிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடே இவ்வாறு விசித்திர குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

விவசாயியின் வீட்டில் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு நெற்றியில் இரண்டு கண்களும் ஒன்றான நிலையில் காணப்படுகின்றன.

டிசம்பர் 29 ஆம் திகதி பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.