ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் ஆனது (ETI) மோசடி இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள போதும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன் நிலையில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆர்ப்பாட்ட பிரிதிநிதிகள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை