யாழ்- வுரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..(காணொளி இணைப்பு)

யாழ்- வுரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது,

பேற்றோர்களினனால் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

புhடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை அதிபர் ஏழு வருட நியமனத்தில் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் மூன்று வருடத்தில் திடீரென அதிபரை இடமாற்றுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திடீர் இடமாற்றத்திற்கான காரணத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என நேற்றைய தினம் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தினை ஈடுபட்டனர்.

ஆதிபர் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி பெற்றோர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித ஆவணவும் செய்யவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.