இன்று 44 நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு
இலங்கை ரயில்வேயில் 44 நிலைய அதிபர்கள் இன்று ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று காலை வழங்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
50 நிலைய அதிபர்களை பணியமர்த்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரயில்வே திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை