11 நாட்களில் 6 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தை பதிவு செய்த யால தேசிய பூங்கா!

யால தேசிய பூங்கா அண்மைக் காலத்தில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.
யால தேசிய பூங்காவை பார்வையிட நேற்று வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் வந்த வருமானம் மாத்திரம் 1கோடியே 12 லட்சத்து 64,179 ரூபாவாகும் என விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

யால தேசிய பூங்காவில் கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் நேற்று வரையான 11 நாட்களின் போது கிடைத்த மொத்த வருமானம் ஆறு கோடியே எண்பத்து மூன்று இலட்சத்து 38,167 ரூபாவாகும்.

தென் மாகாணத்துக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் பெருமளவானோர் யால பூங்காவுக்கு தினமும் வருகை தருவதாகவும் விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.