2023 இல் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து இதொகா உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் விஷேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இதன்போது அவர் பணிப்புரை விடுத்தார்.
கருத்துக்களேதுமில்லை