விவசாயிகளுக்கு மகிழச்சியான செய்தி – வருகிறது குறைந்த விலையில் விசேட உரம்
வர்த்தக உர நிறுவனம் தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கு விசேட கலப்பு உரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கான இந்த விசேட உரமான 50 கிலோ மூடையை சந்தை விலையை விட 3000 ரூபா குறைவாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கு விசேட கலப்பு உரம் தயாரிக்கும் பணியை வர்த்தக உர நிறுவனத்திடமும், உருளைக்கிழங்குக்கான விசேட கலப்பு உரம் தயாரிக்கும் பணியை இலங்கை உர நிறுவனத்திடமும் ஒப்படைக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
இந்த விசேட கலப்பு உரத்தை ஒரு வார காலப்பகுதிக்குள் உற்பத்தி செய்துள்ளதாக அதன் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை