யாழ்,கொடிகாமம் பாலாவியில்,நிவாரணப் பணி.!

ஜே/325 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பாலாவி பகுதியில் வசிக்கும் முப்பத்திரெண்டு வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் 05/01/2023 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

அறக்கட்டளையின் செயலாளரான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் அவ்வூர் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய,பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட வறிய நிலைமுப்பத்திரெண்டு குடும்பங்களுக்கு,குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய்ப்படி,அறுபத்தி நான்காயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்,பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார நிவாரண உதவிப் பணியாக,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ்.மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,ஆகியோர் கொடிகாமம் வடக்கு பாலாவி பகுதியில் உள்ள கலைவாணி முன்பள்ளி கட்டடத்தில் வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.