பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.