சமாசத்தின் தலைவராக மீண்டும் லோகநாதன்..
அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடன் உதவி கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவராக எஸ். லோகநாதன் மீண்டும் தெரிவாகியுள்ளார். சமாசத்தின் புதிய பணிப்பாளர் சபைக்கான தெரிவு கடந்த சனிக்கிழமை காலை கல்முனை சமாசத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
சமாசத்தில் அங்கம் வைக்கின்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் போட்டியிடவும் வாக்களிக்கவும் பங்கேற்றனர் ஆனால் லோகநாதன் போட்டியின்றி புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
கருத்துக்களேதுமில்லை