தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க தொடர்கிறது போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க தொடர்கிறது போராட்டம்!

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது.

வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், யாழ்.மாவட்டத்தில் நாவற்குழி சந்தியில் இடம்பெற்று வருகிறது.

“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று 05 திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் 10 திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.