யாழ். மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கந்தசாமி பன்னீர்செல்வம் என்ற 56 வயது நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது குறித்த நபரின் சடலம் சமையலறையில் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி 2004 ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் இவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.