காரைதீவில் வெகுசிறப்பாக இடம்பெற்ற திருவாதிரை தீர்த்தோற்சவம்.

காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.
திருப்பள்ளியெழுச்சி 10ம் நாள் திருவாதிரை ஊர்வலமானது இன்று 06.01.2023ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட தேரோடும் வீதிவழியாக காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வர ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளின் பின்னர் மீண்டும் தேரோடும் வீதிவழியாக சமுத்திரத்தை சென்றடைந்து திருவாதிரை தீர்த்தோற்சவம் இடம்பெற்ற உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.