உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்பாடு..
January 9th, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டது.
உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்பாடு
கடந்த வருட புத்தாண்டு தினமான 1.1.2022 அன்று வவுனியா தாண்டிக்குளம் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ரஜீவன் (37) என்பவரின் ஓராண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது நண்பர்கள் இன்றைய தினம் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒன்று கூடி உயிரழந்தவரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வு ஒன்றை அனுஷ்டித்திருந்தனர்
மேலும் குறித்த பகுதியில் நிழல் தரும் மரங்கள் சிலவற்றையும் நாட்டியிருந்ததுடன் உயிரழந்த நண்பன் சார்பாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு பெறுமதியான உலர்உணவு பொதியையும் வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை