இலங்கையின் கடன் மறுசீரமைப்பு – ஐ.எம்.எப் க்கு கடிதம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு வலுவான ஆதரவை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது.

இந்தியா சர்வதேச நாணயத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் திட்டத்திற்கான எங்களின் வலுவான ஆதரவை நாங்கள் உறுதி செய்கின்றோம் என இந்திய நிதியமைச்சின் அதிகாரி ராஜாட் குமார் மிஸ்ரா தனது கடிதத்தில் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்படும் நிதி – அல்லது கடன் நிவாரணம் சர்வதேச நாணயநிதியத்தின் கீழ் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இசைவாக இருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.