உர மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

இரசாயன மற்றும் சேதன உர விநியோகத்தின் போது முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கமநல ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய பல அதிகாரிகள் விவசாயிகளுக்கு இரசாயன உர விநியோகத்தின் போது பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கியதாகவும், போலி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனிநபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.