காணும் பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு!

காணும் பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு
யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஏற்பாட்டில் காணும் பொங்கல் நிகழ்வு (21/01/2023) அன்று  யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பூங்கா திடலில் இடம்பெற்றது. மாநகர ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் திணைக்களங்களுக்கிடையே பொங்கல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது. மேலும் முட்டி உடைத்தல் மற்றும் சங்கீதக் கதிரை உள்ளிட்ட பொது விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் யாழ் மாநகரசபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், மாநகரசபை பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.