ATM இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருடர்கள்

கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்​றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர்.

நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.