ரூ.2 கோடி பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகள் கடற்படையால் மீட்பு!

யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்கரையில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 60 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


அனலைதீவு கடற்பரப்பில் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடலோரத்தில் இரண்டு சாக்கு மூட்டைகள் குவிக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்கு மூட்டைகளைப் பரிசோதித்த போது, ​​25 கேரள கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கடத்தல்காரர்கள் குறித்த கேரள கஞ்சாவை கடல் மார்க்கமாகக் கொண்டு வரும்போது கடற்படையின் படகுகளைப் பார்த்து கடலில் வீசியிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கடலில் மிதந்த கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.