யாழ்.மாநகர முதல்வர் தெரிவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக இ.ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமை முறையற்றது என்று அறிவிக்கக் கோரி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சட்டத்தரணியும் யாழ். மாநகர முன்னாள் முதல்வருமான வி. மணிவண்ணன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.