பேருந்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

அநுராதபுரம் – பரசங்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த குறித்த சிறுமி, முன்பக்க கதவின் ஊடாக கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்தில் சிக்குண்டுள்ளார்.

பேருந்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுமி | The Little Girl Who Died Miserably

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அளுத்கம, பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்விகற்றுவந்த, கம்பிரிகஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.