பாராளுமன்றத்துக்கு அருகில் படகு விபத்து – ஒருவர் மாயம்

பாராளுமன்றத்தை அண்மித்த கிம்புலாவல பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட திவவன்னா ஓயா பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மற்றைய நபர் கரையேறி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (26) அதிகாலை 2 மணியளவில் இவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாகவும், அதிகாலை 4.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.