யாழில் காணிவிடுவிப்பு -அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதி காணிகளை எதிர்வரும் 3ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வலி. வடக்கில் சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள நிலையில் அதன் ஒரு பகுதி காணிகளை பாதுகாப்பு தரப்பு இவ்வாறு கையளிக்கவுள்ளது.

 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுக்காக வருகை தந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க, வலி. வடகில் உள்ள தனியார் காணிகளை பகுதி பகுதியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்பின் யாழ். மாவட்ட செயலகத்தில் அதிபர் செயலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் உயர் பாதுகாப்பு வலையக் காணிகள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் அதிபர் செயலக அதிகாரிகள் கள விஜயத்திலும் ஈடுபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.