75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிளோட்டப் போட்டி
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனைக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி நேற்று ஆரம்பமானது.
பருத்தித்துறை – சக்கோட்டையிலிருந்து நேற்று காலை 9.15 மணிக்கு இந்த சைக்கிளோட்டப் போட்டி ஆரம்பமானது. இதனை இலங்கை சைக்கிள் ஓட்டப் போட்டியாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ. சிறீ மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், விளையாட்டுத் துறையினர் எனப் பலரும் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துக்களேதுமில்லை