ஜனவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை -ஹரின்

ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.


ஜனவரி 31ஆம் திகதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த சுருக்க அறிக்கையை வெளியிட்ட அவர், சுற்றுலாத் துறையின் ஊக்கத்தால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, 2022 ஜனவரியில் 82,327 சுற்றுலாப் பயணிகளும், 2023 ஜனவரியில் 102,545 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

2022 இல் மொத்தம் 719,978 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

அதேசமயம், கடந்த ஆண்டு பெப்ரவரியில் 96,507பேரும் மார்ச் மாதத்தில் 106,500 பேரும், ஏப்ரலில் 62,980 பேரும், மே மாதம் 30,207 பேரும், ஜூன் மாதம் 32,856 பேரும், ஜூன் மாதம் 47,293 பேரும், ஜூலை மாதம் 47,293 பேரும், ஓகஸ்ட் மாதம் 37,760 பேரும் நவம்பரில் 59,759 பேரும், டிசம்பரில் 91,961 பேருமாக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.