13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் உயிரைக் கொடுத்தாவது மக்கள் இந்தத் திட்டத்தை தோற்கடிப்பர்- தேசிய சுதந்திர முன்னணி

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

ஒற்றையாட்சி அந்தஸ்தை இல்லாததொழிக்கும் அதிபரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை 13வது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடுமாறு, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்‌சவிடம் தேசிய சுதந்திர முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.