மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் நீதிமன்ற மதிலை தாண்டி தப்பி ஓடிய சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன்; நேற்று ஒருவரை கைது செய்த பொலிசார் அவரை சம்பவ தினமான இன்று பகல் 12 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, நீதவான் அறையில் பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்த கைதியின் விலங்கை பொலிசார் கழற்றிய போது குறித்த நபர் அங்கிருந்து ஓடிச் சென்று நீதிமன்ற மதில் மீது ஏறி தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து தப்பி ஓடிய நபரை தேடிவருவதுடன் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.