கரு ஜயசூரியவிற்கு “ஶ்ரீலங்காபிமான்ய விருது”

ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் “ஶ்ரீலங்காபிமான்ய விருது” இன்று (03) தேசபந்து கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த விருது கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2023 ஆம் ஆண்டிற்கான இந்த ஶ்ரீலங்காபிமான்ய விருதை கரு ஜயசூரியவிற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர் ஆற்றிய சேவையை பாராட்டி இந்த விருதை வழங்க முன்வந்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.