மாத்தளையில் இ.தொ.காவுக்கு மக்கள் அமோக வரவேற்பு!

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபைகளில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 
இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா, சிவஞானம், மாத்தளை மாநகர சபை முதல்வர் மேயர் பிரகாஷ், அம்பங்கங்க பிரதேச சபைத் தலைவர் யோகராஜா உட்பட இ.தொ.காவின் முக்கிய உறுப்பினர்களும் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் இந்தப் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இந்தப் பிரசாரத்தின் போது இ.தொ.காவிற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.