அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 9 -10ஆம் திகதிகளில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 8ஆம் திகதி ஆற்றப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும், 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 9ஆம் திகதி முற்பகல் 9.30க்கு நாடாளுமன்றம் கூடி, கடந்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்ட 51 யோசனைகளுக்கும் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.