சாவகச்சேரியில் பௌர்ணமி தினத்தில் மதுவிற்பனை செய்த நபர் கைது

பௌர்ணமி தினமாகிய நேற்றைய தினம் (05) சாவகச்சேரி மதுவரி திணைக்களத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டில் பியர் ,மதுபானம் விற்பனை செய்த ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய அதே இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இடத்தில் இருந்து அதிக அளவு மதுபான பொருட்கள் மற்றும் பியர் ரின்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.