ஜப்பான் அரசாங்கம் இலங்கை பொலிஸாருக்கு வாகனங்கள் நன்கொடை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பானிய அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வேன்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டேக்கி ஷுன்சுகே ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த வாகனங்களை பரிசோதித்ததைத் தொடர்ந்து, ஜப்பானிய இராஜாங்க வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சுமுக உரையாடலில் ஈடுபட்டார்.

பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இந்த உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் ஜப்பானிய பிரதிநிதிகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் டினூக் கொலம்பகே உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.