அண்ணனை கொலை செய்த 14 வயது தம்பி!

களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் சகோதரன் ஒருவரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது இளைய சகோதரருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர்களின் தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து இளைய சகோதரன் மன்னா கத்தியால் மூத்த சகோதரனின் கழுத்தில் தாக்கியுள்ளார்.

26 வயதுடைய அனுருத்த தனஞ்சய டி சில்வா என்றழைக்கப்படும் சந்துன் என் முச்சக்கர வண்டி சாரதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.