லீ குவான் யூவை பின்பற்றுங்கள் ; ரணிலிடம் ரஞ்சன் கோரிக்கை

சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் பாதையில் செல்லுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
லீ குவான் யூ தனக்கு ஆதரவான பாதாள உலகக் குழுக்களுக்குச் செய்ததைப் போன்று ஜனாதிபதி செய்ய வேண்டும் .

பல்வேறு ஊழல்கள் மூலம் இலங்கையை அழித்த திருடர்கள் குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். திருடர்கள் குழு தமது பாதுகாப்பிற்காக ரணில் விக்கிரமசிங்கவை மெய்ப்பாதுகாவலராக அழைத்து வந்துள்ளனர்.

இதேபோலத்தான் ரெட் டிராகன் மற்றும் பிளாக் டிராகன் என்ற இரண்டு மாஃபியா பாதாள உலகக் குழுக்களின் ஆதரவுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு ஆதரவாக இருந்த மாஃபியா குழு தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அவரது வழியில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும் . ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்வது சந்தேகத்திற்குரியது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.