“ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்”யாழில் பாடல் மூலமாக அரசாங்கத்தை விமர்சித்தார் தயாசிறி.

சாவகச்சேரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பாடல் மூலமாக அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.
14/02 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட போதே அவர் “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்;
பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்” என்ற பாடலைப் பாடி அரசாங்கத்தினை விமர்சித்திருந்தார்.
அத்துடன் ” தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
உரிமை இழந்தோம்;உடமையும் இழந்தோம்; உணர்வை இழக்கலாமா?” என்ற உணர்ச்சிப் பாடலையும் பாடி அசத்தியிருந்தார்.
தயாசிறி ஜயசேகர வழக்கமாக யாழ்ப்பாணம் வரும் போது தமிழ் மொழியில் பாடல்களைப் பாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.