கல்முனை பொது நூலகத்திற்கு தனிநபரின் பெயரைச் சூட்ட அனுமதியோம்.! மாநகரசபை தமிழ்உறுப்பினர்கள் போர்க்கொடி.

கல்முனை பொது நூலகத்திற்கு தனிநபரின் பெயரைச் சூட்ட முனைவதை வன்மையாக கண்டிக்கிறோம். பெயரைமாற்றினால் இனமுரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது.

என கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

கல்முனையில் நேற்று (17) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர்.

இவ் விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை மாநகர சபை இம்மாத அமர்வில் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரான ஏ.ஆர்.எம் மன்சூரின் பெயரை சூட்டுவதாக மாதாந்த நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது.

அதுவும் அமர்விற்கு முன்னர் உறுப்பினர் ஹென்றி போன்ற வர்களுடன் ஆனால் ஏனையதமிழ் உறுப்பினர்களை அழைக்காமல், மூடிய அறைக்குள் பேசியதாக அறிகிறோம்.

கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சராக செயற்பட்ட, மன்சூர் இன மத பேதங்களின்றி சிறப்பான சேவைகள் செய்தவர். தமிழ் மக்களுக்கும் பல வழிகளில் உதவியவர். அவர் போன்று ஒரு முஸ்லிம் தலைவர் இன்றில்லை.அந்த குறைபாடுதான் இன்று இனமுரண்பாட்டிற்கு காரணம். அவர் நல்லவர். அதில் இருவேறு கருத்துக்கிடமில்லை.

இருந்த போதிலும் தற்போது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து சிலர் இவ்விடயத்தை அரசியலாக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தமுனைகின்றனர். அதன் வெளிப்பாடே இத் தனிநபர் பிரேரணையாகும்.

கல்முனை பொது நூலகமானது இரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பொதுச்சொத்து.இந்த நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்படுவதை சிலர் மறைமுகமாக முன்னெடுக்கின்றனர்.இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.சில அரசியல்வாதிகளே தங்களது அபிலாசைகளை நிறைவேற்ற இவ்வாறு செயற்படுகின்றனர்.தேர்தல் காலங்களில் தான் இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.கல்முனை மாநகர கட்டடத்தில இயங்குகின்ற நூலகமானது இதுவரை பெயர்ப்பலகை இல்லாமல் இயங்கி வருவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அண்மையில் அங்கு மாநகர சபை பெயர்ப்பலகையை நாட்ட ஏற்பாடு இடம் பெற்றது. அதனை ஒருவர் கண்டு அடித்து விரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அது கல்முனை பொது நூலகம் என்றே இதுவரை காலமும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே தொடரவேண்டும் என்பது அனைவரினதும் அபிலாசையாகும்.

ஆனால், ஒரு தனி நபரின் பெயரை இந்த நூலகத்திற்கு ஏன் தற்போது சூட்ட முயற்சிக்கின்றீர்கள் என கேட்கின்றோம்.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.ஏனெனில் இனங்கள் இரண்டும் ஒன்றுபட்டது தான் கல்முனை பிரதேசம்.கல்முனை மாநகர சபை இரு சமூகத்திற்கும் சொந்தமானது.எனவே இனியாவது இச்செயற்பாடுகளை தவிர்த்து இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.என குறிப்பிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.