ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறியதை மறுக்கிறார் முஜிபுர் ரஹ்மான்!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) நாடாளுமன்ற உரை ஒரு நகைச்சுவையாக (joke) இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு முதலவர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அதிபர் நாடாளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் விதமாகவே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

அதிபர் ரணிலின் நாடாளுமன்ற உரை ஒரு நகைச்சுவை - முஜிபுர் ரஹ்மான் பகிரங்கம் | Ranil Parliamentary Speech Today Is A Joke

 

“.. அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென தனக்கு ஒருபோதும் குறுஞ்செய்தி (SMS) அனுப்பவில்லை எனவும் அதிபர் மக்கள் அவதானங்களை திசை திருப்பும் விதமாக இல்லாத விடயத்தை சோடித்து கூறுவதாகவும், உயரிய சபையில் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அநுபவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவருக்குரிய பக்குவம் வாய்ந்த நடத்தையாக அமையாது .

ஜனநாயகம், லிபரல்வாதம் பற்றி பரப்புரை நடத்தும் அதிபரின் அரசியல் போக்கு தற்போது மாறியிருப்பதை இன்றைய நாடாளுமன்ற நடத்தை நன்றாக புலனானது. உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் இறையாண்மை, மக்கள் ஆணை,தேச நலனை கருத்திற் கொண்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே சிந்தித்து தமது அரசியல் நடந்தையை ஒழுங்கமைத்திருக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க அதிபர் ஒருமுறை நாடாளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார். அதற்கு முன்னதாக அநுர குமாரவுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனக்கு அமைச்சுப் பதவியை ஏற்குமாறு 2 முறை வேறுவேறு ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார். எனக்கு என்ன வேண்டுமென்றும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னிடம் கேட்டார்கள்.

இதை தான்டிய ஒரு பேச்சோ அல்லது தகவல் பரிமாற்றமே எமக்குள் இடம் பெறவில்லை. இருந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென்று, அல்லது அவரது பிரதிநிதிகள் மூலமோ அவ்வாறான குறுச்செய்தி SMS ஒன்றை அதிபர் ரணில் எனக்கு அனுப்பவில்லை. அவர் அப்படி ஒரு SMS எனக்கு அனுப்பியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும்..” எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.