வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியை செருப்பால் தாக்கியவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது!

பண்டாரவளையிலிருந்து எல்ல நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவரை செருப்பால் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார் என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் தாக்கும் காணொளிகள் கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன.

சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.