அரசுக்குச் சொந்தமான காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு வழங்கிய உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர் கைது

புத்தளம், மஹகும்புக்கடவல, வல்பலுவ பிரதேசத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு வழங்கி 24 மில்லியன் ரூபாவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் 50 வயதுடைய உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு வழங்கி 24 மில்லியன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் பலரிடம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை முன்னாள் உறுப்பினர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.