இலங்கையர் ஒருவருக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்

இலங்கையில் பிறந்த பேராசிரியர் எண்டனி எங்கிக்கு அமெரிக்க சர்வதேச சட்ட சங்கம் கௌரவ விருது வழங்கியுள்ளது.

சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு ‘மேன்லி-ஓ.-ஹட்சன்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பேராசிரியர் எண்டனி எங்கி தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

தமக்கு கிடைத்துள்ள கௌரவப் பதக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர், இது எதிர்பாராத கௌரவம் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.