யாழ்.மாவட்ட முன்னாய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்னாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் அ. சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர்களான ம.பிரதீபன், எஸ்.முரளிதரன் காணிதிணைக்களத் தலைவர்கள், முப்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.