சாதனையாளர் எதிர்வீரசிங்கம் கிளிநொச்சி பகுதிக்கு விஜயம்!

உயரம் பாய்தல் நிகழ்வில் இலங்கையில் சாதனை படைத்த எதிர்வீரசிங்கம்,கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி ஐக்கிய விளையாட்டு கழக அனுசரணையில் பல்வேறு விளையாட்டுக்களை ஊக்குவிப்பது இவரது வருகையின் முக்கிய நோக்கமாகும் என தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மைதானத்தில் மாலை நேரங்களில் உயரம் பாய்தல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளுக்கான ஆலோசனையை எதிர்வீரசிங்கம் வழங்குவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவினூடாக இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

1958 ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.