பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு.

சாவகச்சேரி
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில்-vitol அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 82குடும்பங்களுக்கு கடந்த வாரம் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது சாவகச்சேரி,காரைநகர் மற்றும் உடுவில் பிரதேசங்களைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தலா ஐயாயிரம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.